கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இன்று (16.10.2023) பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இத் தகவலை தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள்
அத்துடன், பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்!
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த மே மாதம் 3568 மையங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கணினி மயமாக்கும் பணி முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது!