தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் 5 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மாமாங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு வியாபாரிகளை நேற்று சனிக்கிழமை (14) இரவு கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்றிரவு பூநொச்சிமுனை பகுதி வீதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு வீதியில் காத்துக்கொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி, மாமாங்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியிடம் சென்ற மற்றுமொரு வியாபாரி என இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை அவதானித்த பொலிஸார் இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதில் மாமாங்கத்தைச் சேர்ந்த 39 வயதுடைய வியாபாரியிடமிருந்து 5 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும், காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயது வியாபாரியிடமிருந்து 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும், அதனோடு சட்ட விரோத வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றி, குறித்த பொருட்களோடு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.