தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக கிடைக்கப்பெற்ற பசுக்களை வறுமையான குடும்பத்திற்கு வழங்கி வைப்பு!

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன  சபையால் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக கிடைக்கப்பெற்ற பசுக்களை  வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மிகவும் வறுமையான குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல் வேலைத்திட்டம்-2023 எனும் திட்டத்திற்கு அமைவாக.

முதற்கட்டமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகம் வெல்லாவெளி, மண்முனை மேற்கு   பிரதேச செயலகம் வவுணதீவு, ஏறாவூர்ப் பற்று  பிரதேச செயலகம் செங்கலடி ஆகியவற்றில் இருந்து பிரதேச செயலாளர் ஊடாக  தெரிவு செய்யப்பட்ட தலா இரண்டு (02) மொத்தமாக ஆறு (06)  பயனாளிகளுக்கு   பசுக்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயமுன்றலில் 2023.10.07 ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு தலைவர் வண்ணக்கர் திரு .இ. மேகராசா தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது  வணக்கத்துக்குரிய ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் செயலாளர் வண்ணக்கர் திரு. சி.கங்காதரன், பொருளாளர் வண்ணக்கர் திரு. ச.கோகுலகிருஸ்னன் தேசமகா சபை உறுப்பினர்கள்  குடிசார்ந்த  தலைவர்கள், செயலாளர்கள்,பொருளாளர்கள் மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்!