தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கையில்!

நாட்டின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்றும் நாளையும் தமது சேவைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமையினால் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக Pஃஈ தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் இதர செலவுகளின் அதிகரிப்பு காரணமாக தற்போதைய கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதால், அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க Pஃஈக்கள் கோருகின்றனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் மூலம், அதன் உறுப்பினர்களின் அவலநிலையை அதிகாரிகளின் கவனத்திற்கு திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக Pஃஈ தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெரும்பாலான Pஃஈக்கள் இன்று சேவையில் இருந்து விலகினாலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக வைத்திய பிரிவுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படாது என PHI சங்கம் தெரிவித்துள்ளது.