அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று புதன்கிழமை மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலை சென்றடைந்ததும் ஜோ பைடன் இஸ்ரேலியத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
அங்கிருந்து ஜோ பைடன் ஜோர்டானுக்குச் செல்லவுள்ளார்.
இது தொடர்பில் ஜோ பைடன் டுவிட்டர் எனும் எக்ஸ் சமூக ஊடகத்தில்,
"ஹமாஸின் கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்து ஒற்றுமையுடன் நின்று, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்கு நான் இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறேன். பின்னர் ஜோர்டானுக்குச் செல்வேன். அங்கு தலைவர்களைச் சந்தித்து, மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்துவேன். மேலும் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஹமாஸ் போராடவில்லை என்பதை தெளிவுபடுத்துவேன் " என தெரிவித்துள்ளார்!