தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ள சதொச நிறுவனம்!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய விலைகள் இன்று வெள்ளிக்கிழமை (26) முதல் அமுலுக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.

சம்பா அரிசியின் விலை 6 ரூபாவினாலும், கொண்டைக்கடலை 6 ரூபாவினாலும், சிகப்பு பருப்பு 5 ரூபாவினாலும், சிவப்பு பழுப்பு அரிசியின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.

இதன்படி, சம்பா அரிசி கிலோ ஒன்றின் புதிய விலை 222 ரூபாவாகவும், கடலை கிலோ ஒன்றின் புதிய விலை 549 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் புதிய விலை 295 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு பழுப்பு அரிசியின் விலை 169 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது .