தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆரயம்பதி தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பருத்திசேனை இளம் யுவதி தூக்கிட்டு கொலை!


வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச் சேர்ந்த (21) வயதுடைய கணேசகுமார் அனோஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

கடந்த நான்கு வருடமாக மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இளைஞனை காதலித்து வந்ததாகவும் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து தனது பணியினை முடித்து விட்டு வீடு திரும்பிய  நிலையில் தனிமையில் இருந்ததாகவும் பின்னர் வீட்டின் அறையினுள் உட்சென்று தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டதனை கண்ட தாயார் தூக்கில் இருந்து மீட்டெடுத்து அருகில் உள்ள  வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை வவுணதீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.