மட்டக்களப்பு மயிலந்தனை மாதவனை பகுதியில் மேச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியை வேறு மாவட்டத்தை சேர்ந்த சிங்கள விவசாயிகளால் அரச மற்றும் முன்னால் கிழக்கு மாகாண ஆளுனரின் ஆதரவுடன் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டதனை கண்டித்து பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களால் 50 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.
இப்போராட்டத்திற்கு சமூக ஆதரவு பெருகிவரும் நிலையில், இன்றைய தினம் இப்பண்ணையாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் யாழ் மற்றும் வந்தாறு மூலை பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை பண்ணையாளர்களுடன் இணைந்து நடாத்தி இருந்தனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு யாழ் திரும்பும் வேளையில் சந்திவெளி பொலிசாரால் வந்தாறு மூலை பல்கலைக்கழக மாணவர் உட்பட 5 மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இனவாத கருத்துக்களை வெளியிடும் பௌத்த பிக்குகளை கைது செய்ய தயங்கும் பொலிசார்... சட்டவிரோத சிங்கள குடியேற்றத்தை தடுக்க முயலாத பொலிசார்... சிங்கள அரசிற்கு அடிவருடிகளாக கிழக்கு மாகாணத்தில் வாயை மூடிக்கொண்டிருக்கும் பிள்ளையான் கருணா வியாழேந்திரன் போன்ற அரசியல்வாதிகள் பிரதேசவாதத்தை தூண்டிக்கொண்டிருக்கயாழில் இருந்து வருகை தந்து பண்ணையாளர்களுக்கு ஆதரவு வழங்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டமை இன வன்மத்தின் உச்சம் என்பதனையும் இனத்துவ அடிப்படையில் நீதி வளைக்கப்படும் என்பதனையும் காட்டி நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.