தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

யானையின் தும்பிக்கை வெட்டப்பட்ட நிலையில் தலை ஆற்றிலிருந்து மீட்பு!

ஆற்றில் யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி  வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு தும்பிக்கை அகற்றப்பட்ட யானையின் தலை வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் வீசப்பட்டுள்ளது.

யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓயாவில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யானையின் தலையுடன் ஒரு காது மாத்திரம் காணப்படுகின்றது. மற்றைய காது துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை வேறொரு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்டு கிரிந்திஓயாவில் போடப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுவரை யானையின் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட தலை மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் யானையின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்!