தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

அபிவிருத்தியை யார் செய்வது நீயா-நானா..என்ற போட்டி வேண்டாம் மலையக பிரதிநிதிகளிடம் ஜீவன் வலியுறுத்தல்!

நாட்டின் காணி உரிமை தொடர்பிலான குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொறுத்தமான பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.

மலையக  மக்களுக்கான அபிவிருத்தியில் நீயா,நானா என்ற போட்டி வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையக பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (25)  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல்,தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி  அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மலையகத்துக்கு கடந்த காலங்களில் சேவையாற்றியுள்ளார்கள், பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளார்கள் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. சிறந்த பணிகளை .வரவேற்கிறேன். பிறரின் பிள்ளைக்கு பெயர் சூட்ட வேண்டிய தேவை  எனக்கில்லை.

அரசாங்கத்துக்கும்,எதிர்க்கட்சிகளுக்கும் மலையகம் நாம் மாத்திரமே உள்ளோம்.ஆகவே எமது மக்களுக்கான முன்னேற்றத்துக்கு நாம் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.காணி உரிமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பிரதமர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமை தொடர்பிலான குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொறுத்தமான பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

மலையக  மக்களுக்கான அபிவிருத்தியில் நீயா,நானா என்ற போட்டி வேண்டாம்.அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தனி வீட்டுத்திட்டம் ஏதும் காணப்படவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி  தொண்டமான்,ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பி.சந்திரசேகரன் ஆகியோர் தனி வீட்டுத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்கள்.

சுமார் 60 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இந்த வீட்டுத்திட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு முதல் கட்டமாக காணி உரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களுக்காக கடந்த கால தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுத்த சிறந்த திட்டங்களை நாங்கள் மறுக்கவில்லை.

அத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம்.ஆனால் எமது  திட்டங்களையே ஏற்க மறுக்கின்றீர்கள்.மலையக மக்களுக்கான முன்னேற்றத்துக்கு முதலில் நாம் ஒன்றுப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்!