தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மண்டூர் பொநூலகத்தின் வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

மண்டூரில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மண்டூர் பொதுநூலகம் ஏற்பாடுசெய்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கானபரிசளிப்பு விழா நேற்று(25.11.2023) நடைபெற்றது.

மண்டூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடனும் நிகழ்வு நடைபெற்றது

மண்டூர் பொதுநூலக வாசகர் வட்டத்தின் தலைவர் பொ.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர்

க.துரைநாயகம்,செயலாளர் அம்பலவாணர் ராஜன், உபபொருளாளர் பேரின்பராஜா மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் என பலரும் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன!